பள்ளியின் அடையாளம், ஒழுங்கு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் முக்கிய அங்கம் சீருடை. சீருடை பயன்படுத்தும் போது பின்வரும் விதிகளை பின்பற்ற வேண்டும்.
ஆண்கள்
- ஆண்கள் நீல நிற அரைக்கை சட்டை அணிதல் கட்டாயம்.
- மேற்சட்டையானது உடற் பருமனில் இருந்து 3 அங்குலம் காற்சட்டை இடுப்போடு ஒரே சீரானதாக அணியப்படுதல் வேண்டும்.
- காற்சட்டையில் தேவையற்ற தையல்கள் இருத்தல் கூடாது.
- காற்சட்டையின் கால் பகுதி 17 அங்குலத்திற்கு குறையாதிருத்தல் இருத்தல் வேண்டும்.
- கருப்பு நிற பாடசாலைக்கான சப்பாத்து அணிதல் வேண்டும்.
- தலை மயிர் கட்டையாக ஒரே சீராக வெட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
- வளர்ந்த மாணவர்கள் தினமும் முகச்சவரம் செய்து கொண்டே பாடசாலைக்கு வருகை தருதல் வேண்டும்
- வளர்ந்த மாணவர்களின் நீளக்காற்சட்டை இறுக்கமின்றி கால்16 fold அளவில் இருத்தல் வேண்டும்
- கழுத்தில் தேவையற்ற கயிறு, சங்கிலிகள் அணியாதிருத்தல் வேண்டும்.
- பாடசாலை நேரத்திலும், பாடசாலையில் இருந்து வெளியேறும் போது கழுத்துப்பட்டி அணிந்திருத்தல் வேண்டும்.
பெண்கள்
- பெண்களின் சீருடை சதுர மடிப்பு அற்றதாக உயரம் முழங்காலில் இருந்து ஒரு அங்குலம் கீழ் நோக்கியதாகவும், கைப்பகுதி சுருக்கம் இல்லாத வகைளிலும் இருத்தல் வேண்டும்.
- தலை முடி எண்ணெய் வைத்து நன்கு வாரப்பட்டு இரட்டை சடை கட்டி கருப்பு ரிபன் கட்டப்படுதல் வேண்டும்.
- கறுப்புப் பொட்டு தெளிவாக வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
- கலர் காதணிகள் தவிர்க்கப்பட வேண்டும்.
- கறுப்பு நிற சப்பாத்து காலுறை மடிக்கப்பட்டிருத்தல் வேண்டும.
- பாடசாலை நேரத்திலும், பாடசாலையில் இருந்து வெளியேறும் போது கழுத்துப்பட்டி அணிந்திருத்தல் வேண்டும்.